நிறுவனம்
சமூகத்திற்குச் சிறந்த கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பண்பாட்டுக் கூறுபாடுகளை உயர்த்துதல் ஆகியவற்றிற்கு உதவும் பெரும் விருப்பத்தையும் உறுதிப்பாட்டையும் காவியன் நிறுவனம் கொண்டுள்ளது. பொதுமக்கள் ஒரு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் வகையில் அவர்களுடைய வளர்ச்சிக்கு நிறுவனம் உழைக்கிறது. நாட்டின் பல்வேறு பிரிவு மக்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் காக்கவும் மேம்படுத்தவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

உலகந்தழுவிய பொருளாதாரம் என்னும் நிகழ்வு இந்தியாவையும் பற்றிக் கொண்டு நகர்ப்புற உயரடுக்கிற்கும் கிராமப்புற மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகமாக்கியுள்ளது. இந்த இடைவெளி இன்னும் கூடுதலாக ஆகக் கூடாது, இது சமன்படுத்தப்பட வேண்டும். இதற்கு தேவையானவற்றை அளிக்கும் வகையில் முன்னேற்றப்பாதையை அமைக்க நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது—அதாவது உலகத் தரமுடைய கல்வி மற்றும் தரமான சுகாதாரப் பாதுகாப்பை அளித்தல் என. மக்கள் மேல்தரத்திற்கு உயரும் திறனில் இருக்கும்போது, பல நேரமும் அவர்கள் தங்கள் மரபுகளின் வேர்கள், பண்பாட்டு மரபியம் ஆகியவற்றை மறந்துவிடுகின்றனர்/அல்லது புறக்கணித்து விடுகின்றனர். உண்மையான, நீடித்த முன்னேற்றத்திற்கு திருப்தி உடைய குடும்பமும் சமூகமும்தான் அஸ்திவாரங்கள் ஆகும். இதற்கு நாட்டின் பண்பாடு மிகவும் முக்கியம் என்று நிறுவனம் கருதுகிறது.



எனவே காவியன் அறக்கட்டளை மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
  • ஜெகமதி கல்வி அறக்கட்டளை
  • ஜெகமதி மருத்துவப் பணி
  • ஜெகமதி கலைக்கூடம்

செய்திகள்
' தமிழர் பண்பாட்டு விழா ' காட்சியகம் காண இங்கே கிளிக் செய்யவும்